அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் துவக்கம்
சண்டிகர், ஏப். 4- பஞ்சாப் மாநி லத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பய ணம் செய்யும் திட்டம் ஏப். 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண் கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை அம்மாநில முதல மைச்சர் அமரீந்தர் சிங் கடந்த மாதம் வெளியிட்டார்.இந்த திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து ஏப். 1 முதல் பஞ்சாப் மாநி லத்திற்குள் பஞ்சாப் சாலை போக்குவரத்து கழகம், பஞ்சாப் சாலை பேருந்துகள், உள்ளாட்சி அமைப்புகள் இயக்கும் நகர பேருந்து, சேவை பேருந்துகள் உள்பட அரசுக்கு சொந்தமான பேருந் துகளில் பெண்கள் இலவச மாக பயணிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது.
இத்திட்டத்தின் மூலம் பஞ்சாப் முழுவதும் உள்ள 1 கோடியே 31 லட்சம் பெண் கள் பயன்பெறுவர் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த, ஆதார், வாக்காளர் அட்டை உள்பட பஞ்சாப் மாநிலத் தவர் என்பதற்காக ஏதோ வொரு அடையாளச் சான்று கள் அவசியம். அதேசமயம், அரசுக்கு சொந்தமான ஏ.சி. பேருந்துகள், வால்வோ பேருந்துகள் மற்றும் எச்.வி. ஏ.சி பேருந்துகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது. அதா வது இந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பய ணம் செய்ய முடியாது என் பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள முதல்வர் அமரீந்தர் சிங், ஏப்ரல் 1 முதல் மாநில போக்குவரத்து பேருந் துகளில் பஞ்சாபின் அனைத்து பெண்கள், சிறுமிகளும் இல வசமாக பயணிக்க எங்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் பெண்களை மேலும் மேம் படுத்துவதற்கான வலுவான படியாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார். இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment