திருநங்கைகள் நல வாரியம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

திருநங்கைகள் நல வாரியம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, ஏப்.13 திருநங்கைகள் நல வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்ற தாக்கீது நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மும்பையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழக்குரைஞர் ஜெய சுகின் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருநங்கைகள் சமூக, கலாசார ரீதியாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்காமல் தவிக்கின்றனர். திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டம் இயற்றினா லும், பல்வேறு தளங்களில் அது போதுமானதாக இல்லை.

இதுபோன்ற பிரச்சினை களைக் களையவும், திருநங்கை களுக்கு எதிராக காவல்துறையினர்  நிகழ்த்தும் வன்முறையைத் தடுக்கவும் காவல் ஆய்வாளர்கள் மனித உரிமை, சமூக உரிமை ஆர்வலர்கள் அடங்கிய நிலைக் குழுவை அமைக்கவும், திருநங் கைகள் நல வாரியத்தை ஏற்படுத் தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்..போப்டே தலைமையிலான அமர்வு நேற்று (12.4.2021) விசாரித்தது.

மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜெய சுகின் ஆஜராகி, திருநங்கைகளுக்கு தமிழகம், மராட்டியம், உத்தரப் பிரதேசம், அசாம் ஆகிய மாநி லங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல வாரியம் போல பிற மாநி லங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என வாதிட்டார்.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைக்கக் கோரிய மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment