தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக உத்தரபிரதேச அரசு மீது உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 7, 2021

தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக உத்தரபிரதேச அரசு மீது உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு

அலகாபாத், ஏப்.7      120 ஆட் கொணர்வு மனுக்கள் விசாரணையின் போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக உத்தர பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின்  சட்ட பதிவுகளை இந்தியன் எக்ஸ் பிரஸ் பகுப்பாய்வு செய்து தகவல் களை திரட்டி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஜனவரி 2018 மற்றும் டிசம்பர் 2020 க்கு இடையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 120 ஆட்கொணர்வு மனுக்கள் மீது  தீர்ப்பளித்து உள்ளது. இதில்  32 மாவட்டங்களில் உள்ள மாஜிஸ்திரேட்டு உத்தரவுகளை ரத்து செய்து 94 தடுப்புக்காவல்களில் இருந்த  கைதிகளை விடுவிக்க உத்தர விட்டு உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மாடு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு  அடிப்படையில் மாவட்ட மாஜிஸ்திரேட்டால்  தடுப்பு காவலில்  வைக்கப்பட்டுள்ளனர்.இவற்றில் 30 வழக்குகளில் - 70 சதவீதத்துக்கும் அதிகமான வழக்கில்  உயர்நீதிமன்றம் உத்தரபிரதேச அரசை கண்டித்து உள்ளது. மேலும் அவர்கள் மீது போடப்பட்ட  தேசிய பாதுகாப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து மனுதாரரை விடுவிக்க உத்தரவிட்டது.

மீதமுள்ள 11 மாடு படுகொலை வழக்குகளில் கூட, ஒன்றைத் தவிர, மற்றவைகளில் கீழ் நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு பிணை வழங்கின, அவர்களுக்கு நீதிமன்ற காவல் தேவையில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளன.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தைத் அமல் படுத்த மாவட்ட மாஸ்திரேட்டு உத்தரவுகளை உன்னிப்பாக ஆராய்ந் தால், கடுமையான சட்டம் ஏன் உடனடியாக செயல்படுத்தப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. ஏனெனில், ஒரு நபரை முறையான குற்றச்சாட்டு இல்லாமல் மற்றும் விசாரணையின்றி தடுத்து வைக்க தேசிய பாதுகாப்பு சட்டம் இந்த  அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.

உண்மையில், ஆய்வுகளில் குற்றம் சாட்டப்பட்டவர் பிணை பெற்றிருந் தாலும் கூட, அந்த நபர் நீதிமன்ற  காவலில் இருந்து விடுவிக்கப்படுவதைத் தடுக்க உத்தரபிரதேசத்தில்  இந்த கடுமையான சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

ஜனவரி 2018 முதல் 2020 டிசம்பர் வரை  தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 12 தடுப்புக்காவல்களில், குற்றவியல் நீதிமன்றம் ஏற்கனவே பிணை வழங்கிய நபர் 200 நாட்களுக்கு மேலாக  சிறையில் இருந்தார்; மூன்று  நபர்கள் தடுப்புக்காவல்களில்,  300 நாட்களுக்கு மேல் சிறையில் இருந் தனர் - ஒரு வழக்கில், 325 நாட்கள், மற்றொரு வழக்கில், 308 நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து

உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் காவல் துறையினர் காவலில் இருக்கும்போது, 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவதற்கான ஒரு நபரின் அரசமைப்பு உரிமையையும் இந்த  சட்டம் பறிக்கிறது.

காவலில் வைக்கப்பட்டு உள்ள  நபருக்கு ஒரு குற்றவியல் நீதிமன்றத்தின் முன் பிணை மனுவை நகர்த்துவ தற்கான உரிமையும் இல்லை.

ஆட்கொணர்வு மனு ஒன்றே அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரே பாதுகாப்பாகும், இது தேசியபாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மக்களைக் காவலில் எடுக்கும் தடையற்ற அரசு அதிகாரத்திற்கு எதிராக உள்ளது.

No comments:

Post a Comment