தருமபுரி நகரத்தின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், உழைப்பால் உயர்ந்த உத்தமரும், தீவிர பெரியார் பற்றாளரும், தரும புரி ‘விடுதலை' வாசகர் வட்டத் தலைவரும், கழகத்தின் காப்பாளரு மாகிய அய்யா மானமிகு சின்னராசு (வயது 87) அவர்கள் இன்று (7.4.2021) காலமானார் என்ற செய்தி கேட்க அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்!
பல ஆண்டுகளாகவே தீவிர கொள்கைக்காரரான இவர், நம்மிடமும், கழகத்திடமும் நீங்காத பற்று கொண்டவர்; ‘விடுதலை' உள்ளிட்ட கழக ஏடுகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய கொடை வள்ளல்.
இவரது எளிமையும், கொள்கை உறுதியும், வியத்தற்குரிய ஒன்று. எனது நலம்பற்றி மிகவும் கவலையோடு எப்போதும் விசாரிப்பவர்.
இவரது தொண்டறத்தைப் பெருமைப்படுத்தவே வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் அவர் பெயரையும், அவரது மகன் ஆசைத் தம்பி அவர்களது பெயரையும் இணைத்து ஒரு கட்டடத்திற்குப் பெயர் வைத்துள்ளோம்.
அவரது மறைவு நமக்கும், நம் இயக்கத்திற்கும், தருமபுரி கழகக் குடும்பத்தவர்களுக்கும், அவரது குடும்பத்தவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் - வருந்தும் - அவரது குடும்பத்தவருக்கும், தோழர்களுக்கும், நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!
அவருக்கு நமது வீர வணக்கம்!
கி.வீரமணி
தலைவர் ,
திராவிடர் கழகம்
சென்னை
7.4.2021
குறிப்பு: கழக அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன் தலைமையில் குடும்பத்தினரோடு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவார்கள்.
No comments:
Post a Comment