சென்னை, ஏப்.7 தமிழகத் தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,645 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின் படி,
தமிழகத்தில் இன்று புதிதாக 3,645 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண் ணிக்கை 9,07,124 ஆக அதிகரித் துள்ளது.
தமிழகத்தில் நேற்று 15 பேர் கரோனா பாதிப்பால் உயிரி ழந்துள்ளனர்.
இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கரோ னாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,804 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று மேலும் 1,303 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
இதன்மூலம் சென்னையில் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,56,359 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மேலும் 1,809 பேர் கரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,68,722 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத் தில் தற்போது 25,598 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment