மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 6, 2021

மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை, ஏப்.6 மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பது ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையைக் காட்டு கிறது என்று தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் செய்தியாளர்களிடையே கூறினார்.

தேனாம்பேட்டை எஸ்.அய்..டி. கல்லூரி வாக்குச் சாவடியில் தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் வாக் களித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

எங்களது ஜனநாயக கடமையை நாங்கள் ஆற்றி இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் அமைதியாக மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக எனக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆகவே, ஜனநாயக கடமையை மக்கள் ஆற்றி கொண்டிருக்கிறார்கள். இதனுடைய முடிவு மே 2 ஆம் தேதி சிறப்பாக இருக்கும். அது உறுதி.

கேள்வி: மக்கள் ஆர்வமாக எழுச்சியுடன் வாக் களித்து வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பதைப் பார்க்கும்போது ஆளும் கட்சிக்கு எதிரான மன நிலை மக்களிடம் இருப்பதை நான் தெளிவாக உணர்கிறேன்.

கேள்வி: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை எப்படி உள்ளது? திருப்தியாக இருப்பதாக நினைக் கிறீர்களா?

பதில்: திருப்தி என்றும் சொல்ல முடியாது. அதிருப்தி என்றும் கூறமுடியாது.

கேள்வி: தமிழ்நாடு முழுவதும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள் என நினைக் கிறீர்கள்?

பதில்: என்னைவிட ஊடகத் துறைக்குத்தான் அதிகமாக தெரியும். நீங்களே சொன்னால் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.

கேள்வி: தி.மு..வினர் போட்டியிடும் முக்கிய தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என ஆளும்கட்சியினர் புகார் செய்திருந்தார்களே இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: அது ஆளும்கட்சியின் ஒரு தூண்டுதல். தோல்வி பயம் வந்துவிட்ட காரணத்தால் எப்படியாவது தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குத் தேர்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை.

கேள்வி: இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியினர் பணப் பட்டுவாடா செய்ததாகவும் புகார் வந்ததே?

பதில்: தேர்தல் ஆணையம்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் செய்தியாளர்களிடையே கூறினார்.

No comments:

Post a Comment