கரோனா பாதுகாப்பு விதிமீறல் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 6, 2021

கரோனா பாதுகாப்பு விதிமீறல் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன

 துபாய், ஏப். 6 துபாய் அரசின் பொருளாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

துபாய் நகரில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை வர்த்தக நிறுவனங்கள் முறை யாக கடைப்பிடிக்கிறதா? என தொடர்ந்து ஆய்வு செய் யப்பட்டு வருகிறது. இதில், கடந்த மார்ச் மாதம் மட்டும் 16 ஆயிரத்து 475 வர்த்தக நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கரோனா விதிமுறை களை முறையாக கடைப் பிடிக்காத 11 வர்த்தக நிறுவ னங்கள் மூடப்பட்டன. மேலும் 252 வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 61 நிறுவனங்களுக்கு எச்ச ரிக்கை கடிதம் வழங்கப்பட் டது. மேலும் 98.1 சதவீத நிறு வனங்கள் கரோனா பாது காப்பு விதிமுறைகளை சரி யாக பின்பற்றி வருவது தெரிய வந்தது.

துபாய் நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல் வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்ட போது முக கவசம் அணியாமல் இருந்தது, சமூக இடைவெளியை பின் பற்றாமல் செயல்பட்டது உள் ளிட்ட பல்வேறு காரணங்க ளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment