ஜகார்த்தா, ஏப். 5 இந்தோனே சியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா மாகா ணத்தில் 3.4.2021 அன்று இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக அங் குள்ள பல கிராமங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. தொடர் மழை காரண மாக அங்குள்ள ஆறுகளில் இருந்து சேறும் சகதியுமாக வெள்ள நீர் வெளியேறி ஊர் களுக்குள் புகுந்து.
கனமழை மற்றும் வெள் ளத்தை தொடர்ந்து லாமெ னெலே என்ற மலை கிராமத் தில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 50 வீடுகள் மீது மண் சரிந்து விழுந்தது.
இதில் அந்த வீடுகளில் இருந்த ஏராளமானோர் உயி ரோடு மண்ணில் புதைந்தனர்.
உடனடியாக அங்கு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட் டன. காவல்துறையினர் மற் றும் ராணுவ வீரர்களுடன் உள்ளூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் தீவிர மீட்புப் பணியில் ஈடு பட்டனர்.
எனினும் 38 பேரை பிண மாகத்தான் மீட்க முடிந்தது. பலத்த காயங்களுடன் 9 பேர் மீட்கப்பட்டனர். இந்த நிலச் சரிவில் சிக்கி மேலும் பலர் காணவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதனிடையே அருகி லுள்ள ஓயாங் பாயாங் மற் றும் வாய்புராக் ஆகிய கிரா மங்களில் 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.
மழை வெள்ளம் காரண மாக அங்குள்ள பல கிராமங் களில் மின் இணைப்பு முற் றிலுமாக துண்டிக்கப்பட்டுள் ளது. மேலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை போக்குவ ரத்து முழுவதுமாக தடை பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்க ளின் இயல்பு வாழ்க்கை பெரி தும் முடங்கியுள்ளது.
No comments:
Post a Comment