2 மணி நேரத்துக்கு குறைவான விமானப் பயணத்தின்போது உணவு வழங்க தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 13, 2021

2 மணி நேரத்துக்கு குறைவான விமானப் பயணத்தின்போது உணவு வழங்க தடை

புதுடில்லி, ஏப்.13 2 மணி நேரத்துக்கு குறைவான விமானப் பயணத்தின்போது உணவு வழங்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், இந்தியாவில் கரோனா பரவலின் இரண் டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மே 25ஆம் தேதி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங் கியது. அப்போது, விமானத்தில் சில நிபந்தனை களுக்கு உட்பட்டு உணவு வழங்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது.

இந்தநிலையில், இந்த உத்தரவில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று மாற்றம் செய்தது. அதன்படி, 2 மணி மற்றும் அதற்கு மேற்பட்ட பயண நேரம் கொண்ட விமான பயணங்களின்போது மட்டுமே, விமானத்தில் உணவு வழங்க வேண்டும் என்றும், 2 மணி நேரத்துக்கு குறைவான விமான பயணங்களில் உணவு வழங்க வேண்டாம் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தடை 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சகம் கூறி யுள்ளது.

No comments:

Post a Comment