ஜெனீவா, மார்ச் 17-- பன்னாட்டள வில் கரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவ னங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும்.
இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாகக் கூறி இந்த தடுப்பூசிக்கு டென் மார்க், நார்வே, அய்ஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிக மாக தடை விதித்துள்ளன. இதனால் பிற நாடுகளிலும் இந்த தடுப்பூசியின் பாது காப்பு குறித்த சந்தேகம் எழுந் துள்ளது.
இதற்கிடையே, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் தங்க ளது தடுப்பூசி பாதுகாப்பு மிகுந்தது என்பது விஞ்ஞா னப்பூர்வமாக நிரூபிக்கப்பட் டுள்ளது என தெரிவித்துள் ளது.
இந்நிலையில், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி விவ காரம் குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு நாளை கூட உள்ளது. தடுப்பூசியின் பாது காப்பு தன்மை குறித்து கிடைக் கப் பெற்றுள்ள தரவுகள் மூலம் ஆய்வு செய்யப்படும் எனவும், அய்ரோப்பிய மருத்துவ அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள உலக சுகா தார அமைப்பு, தற்போதைக்கு தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த வேண்டியது இல்லை என தெரிவித்துள்ளது.