புதுடில்லி, மார்ச் 18- ரயில்வே துறை ஒருபோதும் தனியார் மயம் ஆகாது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபட தெரிவித்துள்ளார்,
நாடாளுமன்ற அவையில் ரயில்வே துறைக்கு கோரப் படும் மானியங்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசிய தாவது:
இந்திய ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்து.
ரயில்வே துறையானது அரசிடம் தான் இருக்கும். அரசு மற்றும் தனியார் துறைகளில் இணைந்து செயல்படும்போது தான் அதிக வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும்.
வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். பயணி களின் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. 2 ஆண்டுகளில் ரயில் விபத்தில் எந்த ஒரு உயிரிழப்பும் நிகழவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராணுவ ஆட்சேர்ப்பில் மாபெரும் ஊழல்: 17 அதிகாரிகள் மீது சிபிஅய் வழக்கு
புதுடில்லி. மார்ச். 18- ராணுவப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் ஊழல் செய்ததாக 5 லெப்டினெண்ட் கர்னல்கள் உள்ளிட்ட 17 அதிகாரிகள் மீது சிபிஅய் வழக்குப் பதிந்துள்ளது.
ராணுவப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய நடந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகக் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. அதை அடுத்து நாடு தழுவிய ராணுவ ஆட்சேர்ப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது.
உடனடியாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை தொடரப் பட்டது.
இதையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி பிரிகேடியர் வி கே புரோகித் சிபிஅய் க்கு புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழு வதும் 30 இடங்களில் சிபிஅய் விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணை அடிப்படையில் மருத்துவமனை, கண்டோன்மெண்ட், இதர ராணுவ நிறுவனங்கள், கபுர்தலா, பதிண்டா, டில்லி, கைதல்,. பல்வால்,. லக்னோ, பரேலி, கோரக்பூர், விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், கவுகாத்தி, ஜோர்கட், மற்றும் சிரங்கோன் போன்ற 30 இடங்களில் சோதனை நடந்தது.
அப்போது ராணுவ தேர்வு வாரியம் மூலம் அதிகாரிகள் மற்றும் பிற அணிகளைச் சேர்ந்தோர் ஆட் சேர்ப்புக்காக லஞ்சம் வாங்கிய விவகாரம் தெரிய வந்தது. அதையொட்டி 5 லெப்டினெண்ட் கர்னல்கள், மேஜர், நாயக் சுபேதார், சிப்பாய் என 17 அதிகாரிகள் மீது சிபிஅய் வழக்குப் பதிவு செய்துள்ளது.
சிபிஅய் அதிகாரிகள் தற்போது கல்வி விடுப்பில் உள்ள லெப்டினெண்ட் கர்னல் பகவா, நாயக் சுபேதார் குல்தீப் சிங் ஆகியோரும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து லஞ்சம் கேட்டதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் லஞ்சம் கோரியவர்களுடன் அவர்களுக்கு உதவியவர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.