டில்லியில் விவசாயிகள் 123ஆவது நாளாக போராட்டம்
புதுடில்லி, மார்ச் 28 டில்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங் களை எதிர்த்து 123ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள் ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியின் சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் எல்லைகளில் போராட் டம் நடத்தி வருகிறார்கள். டில்லி எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 123-ஆவது நாளை எட்டியுள்ளது.
விவசாயிகளின் போராட் டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட் டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மறுபுறம் மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், சட்டத்தை திரும்ப பெற இயலாது என்றும் திட்ட வட்டமாக கூறி வருகிறது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத் தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டம் செய்வதால் 3 மாநி லங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.