மன்னார்குடி கழக மாவட்டம், உள்ளிக் கோட்டையின் முதுபெரும் லட்சிய வீரர், பெரியார் பெருந்தொண்டர் சு.பக்கிரிசாமி அவர்களின் மூத்த மகன், சி.எஸ்.ஆர். ஆக இருந்து ஓய்வு பெற்றவர் தோழர்
ப.நெடுஞ்செழியன் (வயது 80). தமது தந்தையைப் போலவே தீவிர இயக்கப் பற்றாளர். கொள்கையாளர்.
அவர் நேற்று (12.2.2021) இயற்கை எய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைகிறோம்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும் தெரிவிக்கிறோம்.
அவருக்கு நமது வீரவணக்கம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
13-2-2021