கொல்கத்தா, ஜன.12 பாஜக அரசால் இந்தியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த
நவம்பர் 26ஆம் தேதி முதல், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டில்லியின் பல் வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின் றனர்.
இந்நிலையில்,
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரும் விவசாயிகளை மதிக்காமல், பாஜக அரசு நடந்து வருகிறது. இந்த விஷயத் தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதால், இந்தியாவில் விரைவில் உணவு பஞ்சம் ஏற் படும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மோடிஅரசு
கொண்டுவந் துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின் றனர். இதுதொடர்பாக
உச்சநீதி மன்றமும் மத்திய அரசை கடுமையாக சாடியுள் ளது. ஆனால், மத்திய
அரசு, 3 வேளாண்
சட்டங்களையும் நிறுத்தி வைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து
வருகிறது. மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால், நாங்கள் நிறுத்தி வைப்போம் என்றும் இந்த சட்டத்தை அமல்படுத்த ஏன் அவசரப்பபட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் காட் டமாக தெரிவித்து உள்ளது.
இந்நிலையில்
நாடு உணவு
நெருக்கடியைப் சந்தித்துக் கொண் டிருக்கிறது. வேளாண் சட்டங்களில் மத்திய பா.ஜ., அரசு
தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், நம் நாடு விரைவில் உணவுப் பஞ்சத்தை எதிர் கொள்ளும். விவசாயிகள் நம் நாட்டின் சொத்துக்கள். அவர் களின் நலனுக்கு எதிரான எதை யும் நாம் செய்யக்கூடாது என மம்தா பானர்ஜி
தெரிவித்துள் ளார்.