டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· பிரதமர் மோடியின் திறமையின்மையும், ஆர்.எஸ்.எஸ்.-ன் வெறுப்புச் சித்தாந்தமும்
நாட்டிற்கு பெரும் கேடு விளைவித்துள்ளது என காங்கிரஸ் மேனாள்
தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்தியன்
எக்ஸ்பிரஸ்:
· இந்திய விஞ்ஞான தொழில் நுட்பக் கழகமும், தேசிய கடலாராய்ச்சி நிறுவனமும் இணைந்து சேது சமுத்திரத்தில் உள்ள ஆதம் பாலம் பற்றிய வரலாற்று ஆய்வினை இன்னும் இரண்டு மாதங்களில் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
நியூ
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· டில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமித் ஷா நீக்கப்பட வேண்டும்
என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தி
டெலிகிராப்:
· வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ஆம் தேதி விவசாயிகள் நடத்த உத்தேசித்த பேரணியை விவசாய அமைப்புகள் ரத்து செய்துள்ளன.
- குடந்தை
கருணா
28.1.2021