புத்தாண்டுப் பரிசாக தமிழக அரசு - அரசுக் கல்லூரி கட்டணத்தை நிர்ணயிக்கட்டும்!
அண்ணாமலைப்
பல்கலைக் கழகத் துடன் இணைந்த
ராஜா சர்.முத்தையா மருத்துவக்
கல்லூரியில் சேரும் மாண வர்களுக்கு
மற்ற அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும்
கட்டணத்தையே வசூலிக்கவேண்டுமே தவிர, தனியார் மருத்துவக்
கல்லூரிகளைவிட அதிக அளவு கட்டணத்தை
நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல;
உயர் நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்குமுன், மற்ற அரசு மருத்துவக்
கல்லூரிகளில் வசூ லிக்கப்படும் கட்டணம்போல்
ராஜா சர்.முத்தையா மருத்துவக்
கல்லூரியிலும் வசூல் செய்யவேண்டும். இதை
2021 ஆம் ஆண்டு புத்தாண்டு செய்தியாக
தமிழ் நாடு அரசு அறிவிக்கவேண்டும்
என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்
தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
வள்ளல்
ராஜா சர். அண்ணாமலை செட்டியாரின்
அருட்கொடையினால் சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரியாகத் தொடங்கப்பட்ட கல்லூரி, நீதிக்கட்சி ஆதர வுடன் நடைபெற்ற
டாக்டர் சுப்பராயன் அரசினால், தனியார் பல்கலைக் கழகமாக 1929 முதல் சட்டப்படி
உயர்த்தப்பட்டது. அரசுகள்
மானியம் வழங்கி உதவின. (டாக்டர்
சுப்பராயன் முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சத்திய மூர்த்தி
அய்யரின் எதிர்ப்பை ‘சரிகட்டி', சமாளித்த பிற்பாடு அது நிறை வேறியது.
அக்காலகட்டத்தில்தான் செங் கற்பட்டு முதல்
சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றது
என்பதும் குறிப் பிடத்தக்கது).
கல்விப்
புரட்சியைச் செய்த பெருமை அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்திற்கு உண்டு
தமிழ்நாட்டில்
சென்னை பல்கலைக் கழகம் என்று அரசு
ஆதரவுடன் பிரிட்டிஷ் ஆட்சியில் நிறுவப்பட்டதை அடுத்து, தமிழ்நாட்டில் மிகவும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய, கிராமப்புற
முதல் தலைமுறையினர்களை பட்டதாரி களாக்கி ஒரு கல்விப் புரட்சியைச்
செய்த பெருமை அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்திற்கே உண்டு.
ராஜா சர். அண்ணாமலை செட்டியாரும்,
அவரது மூத்த மைந்தர் டாக்டர்
ராஜா சர். முத்தையா செட்டியாரும்
மிகச் சிறப்பாக (இணைவேந்தர்களாக இருந்து) பல ஆண்டுகாலம் சிறப்பு
குன்றாமல் நடந்து, சமூகநீதிக் கொடியும், பல அரசியல் தலை
வர்களுக்கு நாற்றங்காலாகவும், தமிழ் அறி ஞர்கள்,
தமிழ் இசை புத்தாக்க முயற்சி
யாளர்களுக்குரிய கல்விப் பண்ணயமாகவே தொடர்ந்தது!
பிறகு
எம்.ஏ.எம்.இராமசாமி
அவர்கள் இணைவேந்தராக வந்த பிறகு, கொஞ்சம்
கொஞ்சமாக அதில் தவறுகளும், ஊழல்
களும் மலிந்தன.
கல்லூரி
பணியாளர்களும், பொதுமக்களும், சமூகநீதி ஆர்வலர்களும் விரும்பியவாறு...
வேறு வழியின்றி, பணியாளர்களும், பொதுமக்களும், சமூகநீதி ஆர்வலர்களும் விரும்பியவாறு, அதனை மூடிவிடாமல் தொடர
ஒரே வழி தமிழக அரசே
அதனை எடுத்து நடத்துவதைத் தவிர வேறில்லை என்ற
நிலையே நிர்ப்பந்தமாகியது.
தமிழக
அரசு எடுத்துக்கொண்ட பிறகு, சில சிறந்த
அதிகாரிகள் பல குறைபாடுகளை நிவர்த்தி
செய்து, இன்று அரசு மருத்துவக்
கல்லூரியாகவே அது நடைபெற்று வரு
கிறது.
2013 ஆம்
ஆண்டு தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு,
அரசு பல்கலைக் கழகமாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் இயங்கி வருகின்றது.
ஒவ்வொரு
ஆண்டும் தமிழக அரசு அதற்குரிய
நிதி நல்கையை வழங்கி வருகிறது.
அரசு மருத்துவக் கல்லூரியாகவும், மருத்துவமனையாகவும்
தமிழக
அரசு அறிவிப்பு
(இவ்வாண்டு)
2020 பிப்ரவரியில் ராஜா முத்தையா மருத்துவக்
கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு
மருத்துவக் கல்லூரியாகவும், மருத்துவமனையாகவும் தமிழக முதல மைச்சர்
திரு.எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
அனைத்து
வகைகளிலும் இப்போது அது ஒரு தமிழக
அரசு மருத்துவக் கல்லூரியாகவே இயங்கும் தனித் தகுதியைப் பெற்றுள்ளது.
ஆனால்,
மருத்துவ மாணவர்களிடம் வசூலிக்கப்படும் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் மட்டும் பிற அரசு மருத்துவக்
கல்லூரிகளைவிட 30 (முப்பது) மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவது
- மிகப்பெரிய அநீதியும், அக்கிரமும் இல்லையா?
சுயநிதி
மருத்துவக் கல்லூரி அடிப் படையில், அது
செயல்படுவதால், அப்படி கட்டணம் வசூலிக்கப்படுவதாக
தமிழக அரசின் கூற்று நிச்சயம்
ஏற்கத்தக்கதல்ல!
எப்போது
அது கடலூர் மாவட்ட அரசு
மருத்துவக் கல்லூரியாக தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டதோ
- அதுவே தெளி வாகக் கூறும்;
பல அரசு மருத்துவக் கல்
லூரிகளைப் போன்று இதுவும் ஒன்றுதான்
என்பதை சட்டப்பூர்வமாகத் தெளிவு படுத்தும் நிலை
ஏற்பட்டு விட்டதே!
மிகப்பெரிய
சமூகஅநீதி அல்லவா?
இதன் பின்னர் இங்கு படிக்கும் மருத்துவ
மாணவர்களுக்கு இப்படி ஒரு பெருந்
தொகை - அதுவும் எளிய குடும்பத்திலிருந்து மருத்துவக் கனவை
நினைவாக்கக் கடு மையாக உழைக்கும்
நம் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இப்படி ஒரு ‘‘தண்டனை''
தருவது மிகப்பெரிய சமூகஅநீதி அல்லவா?
2013-2014 இல்
அப்போது அதிகக் கட் டணம்
என்று தீர்மானிக்கப்பட்டது. அதா வது ரூ.5.54
லட்சம் என்று அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசு நியமித்த கல்விக்
கட்டணம் தீர்மானிக்கும் குழு, கட்டணங்களை முடிவு
செய்யட்டும் என்று 13.7.2018 அன்று ஆணையிட்டது.
‘‘வெந்த புண்ணில் வேலைச் சொருகு''வதாக அமைந்தது!
அத்தீர்ப்பின்படி,
கல்விக் கட்டணம் தீர்மானிக்கும் குழு, தீர்மானித்த கட்டணம்
ஏற்கெனவே பல்கலைக் கழகம் தீர்மானித்த கட்டணங்கள்
அடிப்படையிலேயே இருந் தது! இது
‘‘வெந்த புண்ணில் வேலைச் சொருகு''வதாக
அமைந்தது!
அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.13,600/- தனியார் சுயநிதிக் கல்லூரிக்கு ரூ.3.55 முதல் 4 லட்சம் ரூபாய் வரை
என்று தீர் மானிக்கப்பட்டது. அண்ணாமலைப்
பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி
கல்விக் கட்டணமோ ரூ.5,44,370 என்று தீர் மானிக்கப்பட்டது!
என்னே
விசித்திரமான கொடுமை!
மருத்துவ
முதுநிலை (பி.ஜி.) படிப்புக்கு
இதே ஆண்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில்
ரூ.30,000 - தனியார் சுயநிதிக் கல்லூரியில் ரூ.2 லட்சம் முதல்
ரூ.3.50 லட்சம் வரை என்று
தீர்மானிக்கப்பட்டது; ஆனால், ராஜா முத்தையா
மருத்துவக் கல்லூரிக்கு ரூ.9,60,000 என்று தீர்மானிக் கப்பட்டது
கொடுமையிலும் கொடுமை அல்லவா?
இதேபோன்று
பல் மருத்துவ படிப்புக்கும் பாரபட்சமான அதீதமான கட்டணங்கள் என்று முடிவு செய்து,
அரசு கமிட்டி அறிவித்தது!
இறுதி
தீர்ப்பு வரும்வரை கூடுதலாக பணம் ஏதும் வசூலிக்கக்
கூடாது!
இந்தக்
கட்டண உயர்வை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள்
மீண்டும் உச்சநீதி மன்றத்தில் முறையிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் இந்தக்
கல்லூரிக்கு விதிக்கப்பட்ட கட்டணம் நியாயமற்றது என்று அழுத்த மாகக்
கூறியுள்ளது.
இறுதித்
தீர்ப்பு வரும்வரை - தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தீர் மானிக்கப்பட்ட அதே
கட்டணத்தை ராஜா முத்தையா மருத்துவக்
கல்லூரிக்கும் தீர்மானித்ததோடு, இறுதி தீர்ப்பு வரும்வரை
கூடுதலாகப் பணம் ஏதும் வசூலிக்கக்
கூடாது என்றும் ஆணையிட்டது!
அத்துடன்,
கூடுதலாக வசூலிக்கப்பட்டி ருப்பின், அத்தொகையினை மாணவர் களுக்கு நிர்வாகம்
திருப்பித் தரவேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்தது!
இறுதியாக
நவம்பர் 6, 2020
(6.11.2020) உச்சநீதிமன்றம்
வழங்கிய தீர்ப்பின்படி, ராஜா முத்தையா மருத்துவக்
கல்லூரி மாணவர்களுக்குப் புதிய கட்டணங்களைத் தீர்மானிக்க,
மாணவர்கள் உயர்நீதி மன்றத்தில் மூன்று வாரங்களுக்குள் மனு
செய்யவேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் நிர்ணயிக்கும் கட்டணமே இறுதியானது என்று தீர்ப்புக் கூறியது.
மாணவர்களை
அச்சுறுத்தும் நிலை வேதனையானது!
ஆனால்,
அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாகம் உயர்நீதிமன்றத்
தீர்ப்பு வருவதற்கு முன்பே எம்.பி.பி.எஸ். மாண
வர்கள் ரூ.5,44,370, பி.டி.எஸ்.
மாணவர்கள் ரூ.3,45,000, முதுநிலை மருத்துவ மாண வர்கள் ரூ.9,60,000,
முதுநிலை எம்.டி.எஸ்.
மாணவர்கள் ரூ.8,50,000 என கட்டணம் கட்டவேண்டுமென்றும்
கட்டாயப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த கட்டணம் செலுத்தவில்லை யெனில், கல்வியை மேற்கொண்டு தொடர முடியாது, வகுப்பறையில்
அனுமதிக்க முடியாது என்று அச்சுறுத்தும் நிலை
மிகவும் வேதனையான சோகப்படலம் ஆகும்!
இதனால்,
மாணவர்களும், பெற்றோரும் இரத்தக் கண்ணீர் விட்டுப் புலம்பும் தவிப்பு உள்ளது.
‘‘வாடிய
பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய'' வள்ளலார் பூமியில், உயிர் காக்கும் சேவை
செய்ய விரும்புவோருக்கு இப்படி ஒரு கொடுமையா?
தமிழக அரசே உடனே தலையிடுக!
தமிழக
அரசு, அக்கல்லூரி மாணவர்களுக்குப் புத்தாண்டு பரிசாக வழங்கட்டும்!
என்றைக்கு
அரசு மருத்துவக் கல்லூரியானதோ அன்று முதலே இரட்டை
அளவுகோல், ‘‘தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கொரு
சீயக்காயா?'' என்று தந்தை பெரியார்
கேட்பதைப்போல; இந்நிலையை மாற்ற, முதல்வரும், சுகாதாரத்
துறை அமைச்சரும், தமிழக அரசும் உடனே
நீதிமன்றம் ஆணையிடுவதற்கு முன்பே இந்த முரண்பாட்டைக்
களைந்து, அனைவருக்கும் சமநீதி வழங்கிட ஆவன
செய்ய முன்வரவேண்டும்.
மக்கள்
கிளர்ச்சியாக மாற இடந்தர வேண்டாம்!
இதை, தமிழக அரசு, அக்கல்லூரி
மாணவர்களுக்குப் புத்தாண்டு பரிசாக வழங்கட்டும்!
உடனே அநீதியைக் களைந்திடுக!
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
31.12.2020