சிவசேனா கடும் விமர்சனம்
துள்ளது.
மாநிலங்களுக்கும்,
மத்திய அர சுக்கும் இடையிலான
உறவு மிகவும் மோசமாகி, கவலையளிக்கும் விதத் தில் இருந்து
வருகிறது. இப்படியே சென்றால், சோவியத் யூனியன் போல்மாநிலங்கள் சிதறுண்டுபோக நீண்டகாலம் ஆகாது என்று சிவசேனா
கட்சி விமர்சித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் வெளி
யிட்டுள்ள தலையங்கத்தில் கூறியி ருப்பதாவது:
“அரசியல்
ஆதாயத்துக்காக மக் களைத் துன்புறுத்துகிறோம்
என்று மத்திய அரசு உணராவிட்டால்,
சோவியத் யூனியன் போல், மாநி லங்கள்
சிதறுண்டு போவதற்கு நீண்ட காலம் ஆகாது.
2020 ஆம் ஆண்டு என்பது மத்திய
அரசின் செயல்திறன், நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பியுள்ளது.
பல்வேறு விவகாரங்களிலும் உச்சநீதிமன்றம் தனது கடமையை மறந்துவிட்டது.
பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா
சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில்,
மத்தியப் பிரதேசத் தில் கமல்நாத் தலைமையிலான
காங் கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க
பிரதமர் மோடி சிறப்பு கவனம்
செலுத்தினார் என விஜய் வர்க்கியா
தெரிவித்தார். என்ன, மக்களால் தேர்ந்தெடுக்கப்
பட்ட ஒரு மாநில அரசைக்
கவிழ்க்க சிறப்பு கவனத்தை பிரதமர் எடுத்துக் கொண்டாரா? நாட்டுக்கு உரித்தா னவர் பிரதமர். கூட்டாட்சி
அடிப் படையில் இந்த தேசம் உள்ளது.
மாநிலத்தில் பாஜக ஆட்சி இல்லாத
அரசுகள்கூட நாட்டின் நலன்பற்றித் தான் சிந்திக்கின்றன. ஆனால்,
இந்தச் செயலால் இந்த உணர்வு கொல்லப்
பட்டு வருகிறது.
மிகப்பெரிய
பேரணிகள், ஊர் வலங்கள் உள்துறை
அமைச்சர் தலைமையில் இந்நாட்டில் நடக் கின்றன. அதேநேரத்தில்
மகாராட் டிரா போன்ற மாநிலங்களில்
கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க
இரவுநேரஊரடங்கும் அவசியம். ஆட்சியாளர்கள் விதிகளை மீறி னால், மக்கள்தான்
விலை கொடுக் கிறார்கள்.நடிகை
கங்கணா ரணா வத்தையும், பத்திரிகையாளர்
அர் னாப் கோஸ்வாமியையும் பாதுகாக்க
மத்திய அரசு முயல்கிறது. இந்திய
எல்லையில் சீன ராணுவம் ஆக்கிர
மித்த போதிலும் அதைப் புறமுது கிட்டுஅனுப்ப
அந்த தேசம் முயல வில்லை.
இந்த விவகாரத்தை திசை திருப்ப தேசியவாதம்
முன்வைக்கப் பட்டு, சீனப் பொருட்களை
வாங்க வேண்டாம் எனக் கூறி சீன
முதலீடு ஊக்குவிக்கப்பட்டது.
உலகமே
கரோனாவில் பாதிப் படைந்தது. அமெரிக்க
அரசு, பொரு ளாதாரப் பிரச்சினையில்
சிக்கிய தனது மக்ககளுக்குச் சிறந்த
நிதியுதவியை வழங்கியது. இதனால் மாதந்தோறும் ரூ.65
ஆயிரம் பணம் அமெரிக்க மக்களின்
வங்கிக்கணக்கில் செல்லும். இதேபோன்று பிரேசில் நாட்டிலும், அய்ரோப்பிய நாடு களிலும் நடந்தன.
ஆனால், இந்திய மக்கள் அனைவரும்
கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு
ஓராண் டாகியும் வெறும் கையுடன்தான் உள்ளனர்.
புதிதாகக் கட்டப்படும் நாடாளுமன்றக் கட்டிடம் எந்தச் சூழலையும் மாற்றிவிடாது.
ரூ.1000 கோடி செலவு செய்து
கட்டப்படும் புதிய நாடாளுமன்றத்துக்கான பணத்தை மக்களின்
சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும். மக்கள்
இதை பிரதமர் மோடியிடம் வலி யுறுத்த வேண்டும்.''
இவ்வாறு
அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.