திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,நவ.21 தனியார் மருத்துவக் கல்லூரி யில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கும் என்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலை வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.11.2020) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர் வையும், சமூகநீதிக் கொள்கையின் அடிப் படையையும், வெளிப்படுத்தும் வகையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று, சட்டமன்றத்தில் நிறைவேற்றித் தந்தும், அதனை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்திச் செயல்படுத்தும் வலிமையும், அக்கறையுமற்ற அ.தி.மு.க. அரசினால், அரியலூர் அனிதா தொடங்கி ஆண்டுதோறும் பல மாணவ- மணிகளின் உயிரைக் கொன்று குவித்தது 'நீட்' எனும் கொடுவாள். அதனால்தான், தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்ததும், 'நீட்' தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரு கிறேன்.
எத்தனை உயிர்கள் போனால் என்ன?
அ.தி.மு.க. ஆட்சியாளர்களோ, எத்தனை உயிர்கள் போனால் எங்களுக்கென்ன, எங்கள் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிந் திடும் வகையில் கமிஷன் கிடைக்கும், டெண்டர்களை வழங்கும் ஆட்சியதிகாரம் மட்டும் இருந்தாலே போதும் என அடங்கி இருந்தார்கள். 'நீட்' தேர்வால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதறடிக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு என அ.தி.மு.க அரசு அறிவித்தது. அதிலும்கூட, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரைத்த 10 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டைநடைமுறைப்படுத் தினால்,தங்களுடைய டில்லி எஜமானர் களின் எரிபார்வைக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி, 7.5 விழுக்காடு என்பதை மட்டுமே எனத் தீர்மானமாக நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிவிட்டு, அத்துடன் தமது கடமை முடிந்துவிட்டதாக எண்ணி, பேசாமல் இருந்து விட்டனர். அங்கே நீண்ட உறக்கம் கொண்டிருந்த உள் இட ஒதுக்கீடு திட்டம், ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.கழகம் நடத்திய மகத்தான போராட்டத்தினாலும், உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பினாலும் தற்போது விழித்து, செயல் வடிவம் பெற்றுள்ளது. அந்த அளவில், இதனை தி.மு.கழகமும் வரவேற்கிறது.
மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு விடுமோ?
'நீட்' தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற் குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அ.தி.மு.க. அரசை,மாணவர்களும் பெற்றோரும் நம்பியிருந்த நிலையில், மருத்துவக் கனவு மீண்டும் சிதைக்கப்பட்டு விடுமோ என்ற மனப் பதற்றத்திற்கும், அச்சத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர்.
அவர்களின் துயர் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என் பதை நினைவூட்டும் அதேநேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக் கறை கொண்டுள்ள தி.மு.கழகம், இந்தக் கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத் துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழு மையாக ஏற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்!
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைய விருக்கின்ற தி.மு.கழக ஆட்சியில், 'நீட்' தேர்வை முழுமையாக ரத்து செய்வ தற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள் ளப்பட்டு, அரசுப்பள்ளி - அரசு உதவிபெறும் பள்ளி - கிராமப்புற - ஏழை - பின்தங்கிய - ஒடுக்கப்பட்ட சமூ கங்களைச் சேர்ந்த அனைத்து மாணவ - மணிகளின் மருத்துவக் கனவும் நிச்சயமாக நிறைவேறும் என்ற உறுதியினை இப்போதே வழங்குகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! போற்றத்தக்கது!!
அரசு பள்ளியில் படித்த மாணவர் களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு காரணமாக 405 மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி நீடிக்க முடியாத ஓர் அவலநிலை ஏற்பட்டது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்குக் குறைந்த கட்டணம், தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க் கட்டணம் என்ற நிலையில்,
அரசுபள்ளிகளில்படித்து,தனியார்மருத்துவக்கல்லூரிகளில்இடம் கிடைத் துள்ளபெரும்பாலானமாணவர்கள்ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்ப தால் அவ்வளவுத் தொகையைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. கண்ணீரும், கம்பலையுமாக அந்த மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கூறி யதை தொலைக்காட்சிகளில் பார்த்த அனைவரும் கண்ணீர் விடாத குறைதான்.
இடங்கள் கிடைத்தும், தனியார் மருத் துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டோம் - இந்த ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும் என்று அவ்வறிக்கை வாயிலாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சில மணிநேரங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், அந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கான கட்டணத் தொகையை தி.மு.க. ஏற்கும் என்று அறிவித்திருப்பது - போற்றி வரவேற்கத்தக்கது;சமூகநீதியில்தி.மு.க. வுக்கு இருக்கும் அபரிமிதமான அக்கறை யையும், ஈடுபாட்டையும் வெளிப் படுத்தக் கூடிய ஆக்கப்பூர்வமான - காலத்தால் அறிவிக்கப்பட்டுள்ள - காலாகாலமும் நின்று பெருமையுடன் பேசப்படக் கூடிய சீரிய முடிவாகும்.
உள்ளந்திறந்து பாராட்டுகிறோம்; பாராட் டுகிறோம்!
வரவேற்கிறோம்! வரவேற்கிறோம்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
21.11.2020