இது என்ன தொடர் கதையா?
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவமதிக்கப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கிறது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தையடுத்த திருக்களப்பூர் ஊராட்சி மன்றத் தலைவராக புஷ்பா என்ற தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் உள்ளார்.
ஒரு விசாரணையின்போது - ஊராட்சி ஒன்றிய ஆணையர் முன்பாகவே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலை வரையும், அவரது கணவரையும் தாக்கியுள்ளார்.